நேற்று மட்டும் 230,000 க்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், ஜனவரி 21:

நாட்டில் நேற்று மட்டும் மொத்தம் 230,020 பெரியவர்கள் கோவிட்-19 க்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர், இது நாட்டில் உள்ள வயது வந்தோருக்கு வழங்கப்பட்ட பூஸ்டர் டோஸ்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 10,235,759 பேராக அல்லது 43.7 விழுக்காடாக கொண்டு வந்தது.

சுகாதார அமைச்சின் (MOH) COVIDNOW போர்ட்டலின் படி, இதுவரை கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்களின் எண்ணிக்கை 22,913,483 அல்லது 97.9 விழுக்காடாக உள்ளது. அதே நேரத்தில் பெரியவர்களில் 23,191,008 பேர் அல்லது 99.1விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினரில், மொத்தம் 2,778,389 நபர்கள் அல்லது 88.3 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 2,863,086 நபர்கள் அல்லது 91 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தினசரி புள்ளிவிவரங்கள் அடிப்படையில், நேற்று மொத்தம் 234,983 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, இதில் முதல் டோஸாக 1,641 மற்றும் இரண்டாவது டோஸாக 3,322 ஆகியவை பயன்படுத்தப்பட்டது, இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 61,778,396 ஆக கொண்டுவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here