கோலாலம்பூர், ஜனவரி 25 :
ஸ்ரீ கெம்பாங்கான் லெஸ்தாரி பெர்டானாவில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டதில், ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் நோராஸாம் காமிஸ் இதுபற்றிக் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
அவரது குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்கு முன்னதாக, மாலை 6.38 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
“முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், வடிகால் அருகே உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது, இதன் விளைவாக ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன என்றார்.
“தீயணைப்புப் பிரிவினர் இடத்தைக் கண்காணித்து வருகின்றனர் என்றும் அங்கு வேறு எந்த பாதிப்பும் இல்லை” என்று அவர் கூறினார்