கோலாலம்பூர், ஜனவரி 31 :
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கு இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
“மக்களும் அவர்களின் அன்புக்குரியவர்களும் நல்வாழ்வை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ ஆசீர்வதிக்கப்படுவதுடன், சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் பல்வேறு இன, மத மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லெண்ண உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும்” என்றும் இஸ்தானா நெகாரா முகநூல் மற்றும் இன்ஸ்ராகிராம் ஆகிய அகப்பக்கங்களில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும் சுயகட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) கடைப்பிடிப்பதன் மூலம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, இப்புத்தாண்டை இனிமையுடன் கொண்டாடுமாறும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினர்.
சந்திர நாட்காட்டியில் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் சீனப் புத்தாண்டை, நாளை சீன சமூகத்தினர் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.