சிரம்பான், பிப்ரவரி 3 :
ஜனவரி 24 முதல் நேற்று வரையுள்ள 10 நாட்களில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 54 பேரை நெகிரி செம்பிலான் காவல் துறையினர் கைது செய்தனர்.
நெகிரி செம்பிலான் கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தின் (IPK) குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) தலைவர், துணை ஆணையர் முஹமட் இசுடின் ருக்காய் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்டத்தை மீறும் கட்டிடங்களில் பொது லாட்டரி நடவடிக்கைகள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
10 நாள் காலப்பகுதியில், தமது துறையினர் மேற்கொண்ட சோதனையில் 4 ஆன்லைன் சூதாட்ட சோதனைகள், 11 சட்டவிரோத சூதாட்ட சோதனைகள் மற்றும் 6 உட்புற சூதாட்ட சோதனைகளை உள்ளடக்கிய 20 சோதனைகளை மாநிலம் முழுவதும் நடத்தியது.
உரிமம் இல்லாமல் சூதாட்டம் மற்றும் பொது லாட்டரி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 54 நபர்களை கைது செய்ததோடு, சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து RM5,598 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தோம்’ என்றார்.
“பொது சட்டம், ஒழுங்கை அச்சுறுத்தும் வகையில், குறிப்பாக ஆன்லைனில் சூதாட்ட நடவடிக்கைகளை காவல்துறை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.
“சூதாட்டச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு தனிநபருடனும், குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு நபருடனும் காவல்துறை சமரசம் செய்யாது, மேலும் இந்த நடவடிக்கையை முற்றாக ஒழிக்கும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.