வீட்டின் சுவர் மீது மோதியதில் கார் தீப்பிடித்து 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்

தும்பாட், கம்போங் மொராக் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாயிலில் இன்று காலை  ஹோண்டா HRV கார் மோதியதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலியான மூவரில் இருவரை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை. ஒருவர் 33 வயதுடைய உள்ளூர் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தும்பாட் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் அஸ்மிர் டாமிரி கூறுகையில், அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

29 வயதான ஒப்பந்ததாரர் ஒருவர் தனது நான்கு சக்கர வாகனத்தை கம்போங் ஸ்ரீ பினாங் 2 இல் உள்ள தனது வீட்டில் இருந்து ஒருவரால் திருடப்பட்டதாகக் கூறி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருடி சென்ற கார் என நம்பப்படும் கார் வீட்டின் மதில் சுவர்  மீது மோதிய பிறகு தீப்பிடித்தது. அதில் பயணித்த 3 பேர் உடல் கருகி இறந்தனர். மூன்று உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார். சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் உள்ளிட்ட வழக்குகளை போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here