தினசரி கோவிட்-19 தொற்றுகளின் விவரம் துல்லியமாக வழங்க சில மாற்றங்கள் செய்யப்படும் என்கிறார் கைரி

தினசரி கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை  இனி ஒவ்வொரு நாளும் பிற்பகலில் தனித்தனியாக வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, படுக்கை பயன்பாடு, தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் சுவாச உதவி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை போன்ற பிற வகைகளுக்கான விவரங்களுடன் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்.

இந்த நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளிக்கிழமை தினசரி தொற்று  எண்ணிக்கை சனிக்கிழமை காலை மட்டுமே வெளியிடப்படும்.

இதுதான் தினசரி தொற்று எண்ணிக்கை பற்றிய அச்சத்தை குறைக்க மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் போன்ற பிற விவரங்களுடன் தினசரி தொற்று விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். தினசரி 20,000 தொற்றுகள் அல்லது 30,000 தொற்றுகளை பார்ப்பதற்குப் பதிலாக, மற்ற அளவீடுகளுடன் அதைப் பார்த்து உண்மையான நிலைமையைப் பற்றிய தெளிவான விவரங்களை பெற வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்துலக விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று கைரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here