கோல திரெங்கானு, பிப்ரவரி 26 :
இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி, 985 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,434 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திரெங்கானுவில் வெள்ள நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது.
இந்த எண்ணிக்கை நண்பகல் 2 மணியளவில் 896 குடும்பங்களைச் சேர்ந்த 3,229 பேராக இருந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 67 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கெமாமன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 21 வெள்ள நிவாரண மையங்கள் செயலில் உள்ளன.
திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் அறிக்கையின் அடிப்படையில், உலு திரெங்கானுவில் 207 குடும்பங்களைச் சேர்ந்த 562 பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க மொத்தம் 16 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டது.
பெசூட்டில், 106 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 471 பேர் இப்போது 15 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சேத்தியூவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 105 குடும்பங்களைச் சேர்ந்த 305 பேர் 10 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டுங்கூனில், 28 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 101 பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க 5 வெள்ள நிவாரண மையம் செயல்படுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.