பிலிப்பைன்ஸின் மின்டானோவில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்; மலேசியாவிற்கு அச்சுறுத்தலில்லை

கோலாலம்பூர், பிப்ரவரி 26 :

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (MetMalaysia) அறிக்கையின்படி, இந்தோனேசியாவின் தாலாட் தீவில் இருந்து வடக்கே 166 கிமீ தொலைவில் 53 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இருப்பினும், ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here