படகு மூழ்கியதால் 6 மணி நேரம் கடலில் மிதந்த, 14 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

லங்காவி, பிப்ரவரி 28 :

நேற்று நண்பகல் 1.30 மணியளவில் பூலாவ் பெராஸ் பாஷாவிற்கு மேற்கே, 9.4 கடல் மைல் தொலைவில் ஐந்து மீட்டர் உயர அலைகளால் தாக்கப்பட்டு படகு மூழ்கியதால், 6 மணி நேரம் கடலில் மிதந்த 14 மீனவர்கள் மற்றும் 4 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

கடலில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட உயமான அலைகள் காரணமாக, அவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியது. இதனால் அவர்கள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கடலில் மிதந்தனர். பின்னர் அதிஷ்டவசமாக ஒரு இழுவைப்படகில் வந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here