மருத்துவமனையில் புதிதாக அனுமதிக்கப்பட்டோர் 1,559 – குணமடைந்தோர் 22,380

கோவிட் தொற்றினால்  நேற்று 1,559 பேர் புதிதாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 990 தொற்றுகள் வகை 1 மற்றும் 2 இல் உள்ளன. 569 தொற்றுகள் வகை 3, 4 மற்றும் 5 இல் உள்ளன.

சிலாங்கூரில்  223  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பகாங் (194) மற்றும் ஜோகூர் (161) உள்ளன. இதற்கிடையில், நேற்று 22,380 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒரு அறிக்கையில் சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs) அவற்றின் மொத்த கொள்ளளவான 856 படுக்கைகளில் 41% இல் இருப்பதாகக் கூறினார்.

நான்கு மாநிலங்களில் உள்ள ICU படுக்கைகள் 50% திறனைத் தாண்டியுள்ளன. அதாவது கிளந்தான் (94%), ஜோகூர் (69%) மற்றும் புத்ராஜெயா (67%). மொத்தம் 193 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது.

கிளந்தான் (108%), சிலாங்கூர் (101%), மற்றும் புத்ராஜெயா (95%) உட்பட பல பகுதிகளில் சாதாரண கோவிட்-19 படுக்கைகளின் பயன்பாடு 50% திறனைத் தாண்டியுள்ளது.

பொது மருத்துவமனைகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை (கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகள்), ஆபத்தான படுக்கைகள் 68% ஆகவும், 61% ஐசியூக்கள் பயன்பாட்டில் உள்ளன.

நேற்றும் ஐந்து கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியிருந்தன. மலேசியாவின் கோவிட்-19 தொற்று விகிதம் (R-nought அல்லது R0) 1.05 ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here