ஜார்ஜ்டவுன், மார்ச் 7 :
வடகிழக்கு மாவட்டத்தில், கடந்த புதன் கிழமை நடந்த ஆறு சோதனைகளின் மூலம், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்தோடு RM79,116 மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் சியாபு வகை போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 21 முதல் 31 வயதுடைய நான்கு ஆண்களும், விசாரணையில் உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.
நள்ளிரவு 12 மணியளவில் சுங்கை துவாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டின் வாகன நிறுத்துமிடத்தில் முதல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து, சுங்கை துவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட இரண்டாவது சோதனையில், மற்றொரு ஆண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இந்தச் சோதனையின்போது, அந்த வீட்டில் சுமார் 980 கிராம் ஹெரோயின் அடங்கிய மூன்று வெளித்தெரியும் பாக்கெட்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர்.
“இரண்டு சந்தேகநபர்கள் மீதான மேலதிக விசாரணையின் அடிப்படையில், ஆயர் ஈத்தாம், பாயா தெருபோங் இல் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் மூன்றாவது சந்தேக நபரை கைது செய்ய முடிந்தது.
இதன்போது, 3.3 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் கொண்ட 9 வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் 291 கிராம் எடையுள்ள சியாபு போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 11 வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர்” என்று வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சோஃபியன், இங்குள்ள பாயா தெருபோங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் நான்காவது சோதனை மேற்கொள்ளப்பட்டு, அங்கு மேலுமொரு சந்தேக நபரைக் கைது செய்ததோடு, அப்பகுதியில் உள்ள ஒரு கடையையும் அகற்றியதாக கூறினார்.
இந்த சோதனையில், சந்தேகத்திற்கிடமான ஹெரோயின் போதைப்பொருள் 117 கிராம் மற்றும் 215 கிராம் மற்றும் 179 கிராம் சியாபு ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
“அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக ஜார்ஜ்டவுன் பகுதியில் மற்றொரு ஆண் சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.
“பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் மதிப்பு RM79,116 எனவும், கைப்பற்றப்பட்ட நான்கு வாகனங்கள் மற்றும் நகைகளின் மதிப்பு RM65,445 எனவும் ” அவர் மேலும் கூறினார்.
சிறுநீர் பரிசோதனைகளில் மூன்று சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறிந்ததாகவும், அவர்களில் மூன்று பேர் குற்றம் மற்றும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட கடந்தகால பதிவுகளையும் கொண்டுள்ளனர் என்று சோஃபியன் கூறினார்.
சோதனை மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு வீடுகளும் மூன்று மாதங்களுக்கு முன்னர் முதல் சந்தேக நபரால் வாடகைக்கு விடப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
போதைப்பொருள் விநியோக நடவடிக்கை உள்ளூர் சந்தைக்கானது என்றும், கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருள்களின் எண்ணிக்கையை 25,557 போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39b இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் மார்ச் 9 வரை 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.