உக்ரைன் -ரஷ்யா போர் எதிரொலி: ரஷ்யாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்

வாஷிங்டன், மார்ச் 9 :

உக்ரைன் மீது ரஷ்யா 14வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பல பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்.

ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் ரஷ்யாவிற்கு ஈடுகொடுத்து வருகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போர் எதிரொலியாக ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here