பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமிக்கு கோவிட் தொற்று

பினாங்கு துணை முதல்வரும் பேராசிரியருமான டாக்டர் பி.இராமசாமிக்கு  மார்ச் 9, 2022 அன்று  கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. அன்று முதல் ஒரு வார காலத்திற்கு அவர் வீட்டில் சுய கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் இருப்பார்.

பினாங்கில் உள்ள KOMTAR, 52ஆவது மாடியில் உள்ள துணை முதல்வர் II (TKM II) அலுவலகம் இந்த காலகட்டத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழக்கம் போல் செயல்படும். TKM II அவர்களின் விசாரணைகள் மற்றும் விண்ணப்பங்களுக்கு 04-2629930.

இந்த காலகட்டத்தில் ஃபிராய் சேவை மையம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மற்றும் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை வழக்கம் போல் செயல்படும்.

பொதுமக்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு சேவை மையத்தை 04-3839131 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here