கோலாலம்பூர், அக்டோபர் 26:
நேற்றுவரையுள்ள தரவுகளின் அடிப்படையில், நாட்டிலுள்ள பெரியவர்கள் மொத்தம் 22,166,633 பேர் அல்லது 94.7 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் முடித்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெரியவர்களில் 97.5 விழுக்காட்டினர் அல்லது 22,822,013 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பதாக அமைச்சகம் தனது கோவிட்நவ் (CovidNow) போர்ட்டலில் தெரிவித்தது.
நேற்றைய தினம் 184,162 டோஸ்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் 22,181 பூஸ்டர் தடுப்பூசியாகவும் 21,927 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும் 140,054 தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாகவும் பயன்படுத்தப்பட்டது. தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் (PICK) கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 49,253,453 ஆகக் கொண்டு வந்ததாகவும் அது கூறியுள்ளது.
12 முதல் 17 வயது வரையிலான பதின்ம வயதினர் 1,739,835 பேர் அல்லது 55.3 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 81.6 விழுக்காட்டினர் அல்லது 2,566,922 பேர் குறைந்தபட்சம் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.