அலோர் ஸ்டார்: லங்காவி அருகே உள்ள கம்போங் புக்கிட் மாலுட் குடியிருப்பு பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 17 வீடுகள் எரிந்து நாசமானது.
கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குனர் சயானி சைடன் கூறுகையில் இந்த சம்பவம் தொடர்பாக மாலை 6.47 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது.
பெர்சியாரான் புத்ரா மற்றும் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து (பிபிபி) அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
பதினைந்து வீடுகள் 95 சதவிகிதம் அழிந்தன, இரண்டு 50-80 சதவிகிதம் எரிந்தன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார். இரவு 7.47 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, பின்னர் இரவு 10.47 மணிக்கு முற்றிலும் அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.