பந்திங், மார்ச் 24 :
தன்னோடு பிறந்த தனது இரட்டை சகோதரரை கொலை செய்ததாக, விவசாயி ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாடடப்பட்ட 37 வயதான பி.வேலுகுமார், மாவட்ட நீதிமன்ற நீதிபதி கைருல் ஃபர்ஹி யூசோப் முன்நிலையில் தமிழ் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை புரிந்துகொண்டதாக தலையசைத்தார்.
கடந்த மார்ச் 11 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரையான காலப்பகுதியில், ஜாலான் ஸ்ரீ சீடிங், கம்போங் புக்கிட் சீடிங், பந்திங், கோலா லங்காட் சாலையோரத்தில் தனது இரட்டைச் சகோதரனான பி. வேலகுமாரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இது கட்டாய மரண தண்டனையை வழங்குகிறது.
இந்த வழக்கில் பிரேதப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க மே 26-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
துணை அரசு வழக்கறிஞர் அமீர் சைபுல்லா முகமது சல்லேஹுடின் வழக்கு தொடர்ந்தார், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எவரும் ஆஜராகவில்லை.









