ஈப்போ, ஏப்ரல் 1 :
கடந்த மாதம் 119.7 கிலோகிராம் எடையுள்ள சியாபு போதைப்பொருளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று நண்பர்கள் இன்று இங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜி.அகிலன், 37, ஒரு லாரி ஓட்டுநர், ரஹிஷாம் அப்துல் கானி, 35 மற்றும் முகமட் அஸ்ருல் அஃபண்டி சுல்கிஃபிளி, 32, ஆகிய இரு வர்த்தகர்களும், நீதிபதி ஜெசிகா டெய்மிஸ் முன் குற்றச்சாட்டுகளை வாசிக்கப்பட்டதன் பின்னர், தாங்கள் புரிந்துகொண்டதாக பதிலளித்தனர்.
எனினும், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
லோட் 30633, ஜாலான் லஹாட், சிம்பாங் பூலாய், கம்போங் கெபயாங் ஆகிய இடங்களில் மார்ச் 21 அன்று காலை 11.20 மணியளவில் போதைப்பொருளை கூட்டாக விநியோகித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்துப் படிக்கப்பட்டு, அதே சட்டத்தின் பிரிவு 39B (2) இன் கீழ் இக்குற்றம் தண்டனைக்குரியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மூவருக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், 15 கசையடிகளுக்கு குறையாத கசையடி தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ரஜித் சிங் ஆஜரானார், அதே நேரம் அரசுத் துணை வழக்கறிஞர் நோர் சயாஹிரா அசாஹார் இவ்வழக்கைத் தொடர்ந்தார்.
மேலும் ஜூன் 16-ம் தேதியை வழக்கின் மறு தேதியாக நீதிமன்றம் நிர்ணயித்தது.