ஜகார்த்தா: ஆசியானுக்கான மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி கம்சியா கமாருதீன், சிலோம் செமாங்கி மருத்துவமனையில் இன்று காலமானார். மரணத்திற்கான காரணம் டெங்கு மற்றும் அடிப்படை மருத்துவ சிக்கல்களால் ஏற்பட்டதாக மலேசிய தூதரக பொறுப்பாளர் அட்லான் ஷபீக் தெரிவித்தார்.
54 வயதான கம்சியா, அக்டோபர் 3, 1967 இல் பிறந்தார். மேலும் சிங்கப்பூருக்கான மலேசியாவின் துணை உயர் ஆணையராக இருந்தார். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆசியான் நிறுவனத்தின் (ஆசியான்-ஐபிஆர்) ஆளும் குழுவிற்கு மலேசியாவின் பிரதிநிதியாகவும் அவர் இருந்தார்.
வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா, கம்சியாவின் மறைவிற்கு வருத்தமளிப்பதாகக் கூறினார். அவர் 1992 முதல் விஸ்மா புத்ராவுக்கு சேவை செய்ததாகவும், தாய்லாந்திற்கும் நியமிக்கப்பட்டார் என்றும் கூறினார். கம்சியா பிலிப்பைன்ஸிற்கான மலேசியத் தூதரான நார்மன் முஹம்மதுவின் மனைவியும் ஆவார்.