குளுவாங், ஏப்ரல் 3 :
இங்குள்ள ஸ்ரீ லாலாங் அருகே உள்ள ஜாலான் குளுவாங்கில், நேற்று இரவு டொயோட்டா வியோஸ் வகை கார் சறுக்கி மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
மூத்த தீயணைப்பு அதிகாரி II ஆபரேஷன்ஸ் கமாண்டர் ஜைடி துமிரானின் கூற்றுப்படி, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்றார்.
“ஜோகூர் மாநில செயல்பாட்டு மையத்திற்கு (PGO) நேற்று இரவு 11.02 மணிக்கு MERS999 லைன் வழியாக சாலை விபத்து அவசர அழைப்பு வந்தது.
“ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழு, குளுவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஒரு FRT மற்றும் EMRS இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
“சம்பவத்தில் இருவர் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனால் சுகாதார அமைச்சின் ஊழியர்களால் அவர்கள் இறந்ததை உறுதிப்படுத்தினர்.
“பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது ,” என்றும் நள்ளிரவு 12. 16 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிந்தது என்றும் அவர் கூறினார்.