மலேசியாவின் முதல் கருங்கல் ஆலயமும் தென்கிழக்காசிய திருப்பதி என்று அழைக்கப்படும் கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் குரு பெயர்ச்சி மகா யாகம் நடைபெறவுள்ளது என்று ஆலயத் தலைவர் சங்கரத்னா சித.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.
நாளை 14.4.2022 சித்திரை 1ஆம் தேதி மலேசிய நேரப்படி காலை 10.30 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைகிறார்
இந்த மகா யாகம் வரும் 17.4.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும். அனைத்து பக்த பெருமக்களும் குரு பெயர்ச்சியில் கலந்து குருபகவானின் அருளை பெய்யுற்றுமாறு வேண்டுகிறோம்.
உலகமே கோவிட் தொற்றினால் பீடிக்கப்பட்டு தற்பொழுது பழைய நிலைக்கு நாடும் நாமும் திரும்பி வருகிறோம். அதனால் உலக மக்களின் ஆரோக்கியத்திற்காகவும் நம் குடும்பத்தாரின் நலனுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.