மதில் சுவர் விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்

மலாக்கா அலோர் காஜாவின் கம்போங் புக்கிட் பங்களாவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி, கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 12) இரவு 7 மணியளவில், நூர் இமான் இர்டினா இரத்த வெள்ளத்தில் இருந்ததை அவரது தாயார் அஸ்னினாகியா மாட் அலி 44, வீட்டின் வளாகத்தில் கண்டுள்ளார்.

அலோர் காஜா OCPD துணைத் தலைவர் அர்ஷத் அலி கூறுகையில், இந்த விபத்தின் போது பாதிக்கப்பட்டவரின் தாயார் நோன்பு துறக்க தயாராகிக்கொண்டிருந்தார். பெரிய சத்தம் கேட்டு, சமையலறையிலிருந்து வெளியே ஓடிவந்த தாய், தன் மகள் உயிரற்ற நிலையில் இருப்பதைக் கண்டதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் மற்ற இரண்டு உடன்பிறப்புகளும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள்  காயமின்றி தப்பினர் என்று  அர்ஷாத் கூறினார். இடிந்து விழும் முன் வீட்டின் கான்கிரீட் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here