RM110,000க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய ஆடவர் கைது

மிரி, ஏப்ரல் 19 :

நேற்றிரவு இங்குள்ள ஒரு பட்ஜெட் விடுதி அறையில் நடத்திய சோதனையில், RM110,000 க்கும் அதிகமான மதிப்புள்ள எக்ஸ்டசி பவுடரைக் கைப்பற்றியதுடன் போதைப்பொருள் விற்பனையாளர் என்று நம்பப்படும் உள்ளூர் நபரையும் போலீசார் கைது செய்தனர்.

மிரி மாவட்ட காவல்துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் முகமட் சப்ரி ஜைனோல் இதுபற்றிக் கூறுகையில், சரவாக் காவல் படைத் தலைமையகத்தின் (ஐபிகே) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல்துறைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், இரவு 10.30 மணியளவில் 44 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

“விடுதி அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் விளைவாக, போலீசார் 99 ஆப்பிள் சுவை கொண்ட பானச் சாறு மற்றும் 72 மாம்பழ சுவை கொண்ட பானச் சாறு அடங்கிய பாக்கெட்டுகளில் எக்ஸ்டசி போதைப்பொருள் மருந்துகளின் கலவை உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

“கைப்பற்றப்பட்ட மருந்தின் மொத்த எடை 5,450 கிராம் என்றும் அதன் மதிப்பு RM102,600 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளூர் சந்தைக்காக கேளிக்கை மையங்களை மையமாக வைத்து விநியோகிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட வேலையில்லாத சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், மெத்தம்பேட்டமைனுக்கு நேர்மறையான பதிலை பெற்றார் என்று அவர் கூறினார்.

“சந்தேக நபர் 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B மற்றும் பிரிவு 15 (1) (a) இன் படி, மேலதிக விசாரணைக்காக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here