கோலாலம்பூர், ஏப்ரல் 26 :
நேற்றிரவு யுனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியாவின் (யுஎஸ்எம்) மாணவர் தங்கும் விடுதியின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் சோஃபியன் சாந்தோங் கூறினார்.
கல்வி கற்கைகள் துறையைச் சேர்ந்த 22 வயது ஆண் மாணவனின் சடலம் விடுதி கட்டிடத்தின் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவர் லுக்மான் ஹக்கீம் மாட் ராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் இச்சம்பவம் குறித்து இரவு 10.30 மணியளவில் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, மேலும் இந்த வழக்கை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர், என்றார்.
முன்னதாக, ஹாஸ்டல் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து கிடந்த யுஎஸ்எம் மாணவர் ஒருவர் தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.