போதைப் பொருள் உட்கொண்டு விபத்தினை ஏற்படுத்திய பெண் கைது

ஜாலான் ஜோகூர் பாரு-அயர் இடாம் பகுதியில் 30 வயதுடைய பெண் ஒருவர் போதையில் போக்குவரத்துக்கு எதிராக வாகனத்தை ஓட்டிச் சென்று மற்றொரு கார்களுடன் மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அதிகாலை 1.45 மணியளவில் நிகழ்ந்ததாகவும் இரு ஓட்டுநர்களும் காயமின்றி தப்பியதாகவும் ஜோகூர் பாரு உத்தாரா காவல்துறைத் தலைவர் ரூபியா அப்துல் வாஹித் தெரிவித்தார். சிறுநீர் பரிசோதனையைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஆம்பெடமைன்களின் உட்கொண்டிருந்தது  கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

போதைப்பொருள் பாவனையில் வாகனம் ஓட்டியதற்காக 1987 ஆம் ஆண்டு வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் 45ஆவது பிரிவின் கீழும், ஆபத்தான போதைப்பொருளை சுயமாகச் செலுத்தியதற்காக ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1985 இன் 15(1)(a) பிரிவின் கீழும் சந்தேகநபர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சாட்சிகள் ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here