பயிற்சி கால மருத்துவர் கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்

பினாங்கு மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு பயிற்சி கால மருத்துவர், ஜாலான் டத்தோ கெராமட்டில் உள்ள அலுவலகக் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்தார் என்று தி வைப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் சோஃபியன் சாண்டோங் கூறுகையில், ஆரம்பத்தில் இந்த வழக்கு திடீர் மரண அறிக்கையாக வகைப்படுத்தப்பட்டது.

தி வைப்ஸ் தொடர்பு கொண்டபோது, புதிய ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்தால், வழக்கு மறுவகைப்படுத்தப்படும் சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை.

அவரது பெற்றோரின் வேண்டுகோளின் காரணமாக அவரது பெயர் மறைக்கப்பட்ட பயிற்சி கால மருத்துவர், மூன்று வாரங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இரண்டு வருட கால இடைவெளியில் ஜூனியர் டாக்டர் ஒருவர் பலியான இரண்டாவது மரணம் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here