ரவாங்கின் தாமான் ரிம்பா கஞ்சிங் நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போது, தவறி விழுந்ததில் இந்தியர் ஒருவருக்கு காயம்!

ரவாங், மே 5 :

இங்குள்ள தாமான் ரிம்பா கஞ்சிங் நீர்வீழ்ச்சியில் குதூகலமாக குளித்துக்கொண்டிருந்த இந்தியர் ஒருவரின் மகிழ்ச்சி, தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்ததால், இன்று சோகமாக மாறியது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோரஸாம் காமிஸ் இதுபற்றிக் கூறுகையில் , பிற்பகல் 2.31 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறினார்.

“ராவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு இயந்திரத்துடன் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“அருவியில் தவறி விழுந்ததில் 29 வயது இந்தியர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக வந்தவுடன் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு வருவதற்குள் பாதிக்கப்பட்டவரை பொதுமக்கள் வெளியே எடுத்ததாக நோராஸாம் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் குளிப்பதற்கு அந்த இடத்திற்கு வந்ததாகவும், ஒருவேளை அவர் நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறையில் ஏறி வழுக்கி விழுந்திருக்கலாம் என்றும் புரிகிறது.

“பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here