ஹனோய், மே 12 :
2027 ஆம் ஆண்டு SEA விளையாட்டுப் போட்டிகளை மலேசியா ஏற்று நடத்த உள்ளது.
இன்று (மே 12) வியட்நாம் தேசிய மாநாட்டு மையத்தில் நடைபெற்ற SEAGF கூட்டத்தின் போது, தென்கிழக்கு ஆசிய விளையாட்டு சம்மேளனம் (SEAGF) மலேசியாவுக்கு 34வது விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு ஏகமனதாக வழங்கியது.
கம்போடியா அடுத்த ஆண்டு 32வது SEA விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ளது, அதனைத்தொடர்ந்து தாய்லாந்து 2025ல் 33 ஆவது SEA விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ளது.
மலேசியா பிராந்திய விளையாட்டுகளை நடத்துவது இது ஏழாவது முறையாகும்.