கராச்சி, மே 13:
பாகிஸ்தான் கராச்சியின் சத்தார் மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்தோரில் சிலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
குண்டு வெடிப்பின்போது அருகில் இருந்த பல வாகனங்கள் மற்றும் கட்டடங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. மேலும் இதன்போது அரசு அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக டிஐஜி சார்ஜீல் கரல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெடிகுண்டானது உள்ளூரில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், சைக்கிள் கேரியரில் வைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் வெடிகுண்டு செயலிழப்புப் படை தெரிவித்துள்ளது.