முகம் மற்றும் உடலில் காயங்களுடன் காணப்பட்ட 3 வயது சிறுவனின் பாதுகாவலரை போலீசார் தேடி வருகின்றனர்.
குழந்தை கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா காவல்துறை தலைவர் ஃபரூக் எஷாக் தெரிவித்தார்.
குழந்தை துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், 40 வயது மதிக்கத்தக்க சிறுவனின் பாதுகாவலரை தேடி வருவதாக அவர் கூறினார். போதைப்பொருள் குற்றத்திற்காக பெற்றோர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், அந்த நபர் ஜனவரி முதல் சிறுவனை கவனித்து வந்தார்.