போக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டிய டாக்சி ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை

செர்டாங்கில் 70 வயது டாக்சி டிரைவர்  40 மீட்டர் தூரம் போக்குவரத்திற்கு எதிராக வாகனத்தை ஓட்டிச் சென்றதால், மற்ற சாலையில் பயணிப்போருக்கு ஆபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஏ.ஏ.அன்பழகன் கூறுகையில், பிற்பகல் 2.30 மணியளவில் ஜாலான் புத்ரா பெர்மாய் (AEON Taman Equine) ஶ்ரீ கெம்பாங்கன் போக்குவரத்து விளக்கு சந்திப்பில் ஆபத்தான முறையில் வாகனமோட்டியதால் சாலையைப் பயன்படுத்துபவர்கள் பெரும் அச்சத்தை எதிர் கொண்டனர்.

அவரது கூற்றுப்படி, 11 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடக தளங்களிலும் பரவியது. ஆரம்ப விசாரணையில் டாக்ஸி டிரைவர் மேபேங்க் Taman Equine செல்வதற்காக AEON Taman Equine முன் உள்ள ஒரு காண்டோமினியத்தில் மூன்று பயணிகளை அழைத்துச் செல்வது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்தை அடைந்ததும் டாக்சி டிரைவர், பெர்சியாரான் பிங்கிரான் புத்ரா 2 ரவுண்டானாவில் திரும்பாமல் எதிர் பாதை வழியாக சென்றார்.

ஓட்டுநர் போக்குவரத்திற்கு எதிராக சுமார் 40 மீட்டர் தாண்டி, பின்னர் மேபேங்க்  Taman Equine நோக்கி போக்குவரத்து விளக்கு சந்திப்பில் வலதுபுறம் திரும்பினார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அன்பழகன் கூறுகையில், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 43 (1)ன் கீழ் (அஜாக்கிரதையாக மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்) இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. டாக்சி ஓட்டுநர்களுக்கு முதற்கட்ட சிறுநீர் ஸ்கிரீனிங் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here