டிரெய்லர் லோரி மோதி 10 வயது சிறுமி உயிரிழந்தார்

புக்கிட் மெர்தஜாம், ஜாலான் கம்போங் பாரு, அல்மா என்ற இடத்தில் இன்று தனது தாயுடன் சென்ற மோட்டார் சைக்கிள் டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4ஆம் வகுப்பு சிறுமி உயிரிழந்தார்.

மத்திய செபராங் பெராய் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷஃபீ அப்த் சமத் கூறுகையில்,  விபத்தில் சிக்கிய 10 வயது சிறுமி பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பாதிக்கப்பட்டவரின் தாயார், கட்டுப்பாட்டை இழந்ததால் அவர்கள் சாலையில் விழுந்ததில் விபத்து நடந்ததாக நம்பப்படுகிறது.

30 வயதான பெண் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். ஆனால் அதே திசையில் சென்ற டிரெய்லரால் அவரது மகள் மோதி உயிரிழந்தார்  என்று அவர் நேற்றிரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குழந்தையின் உடல் புக்கிட் மெர்தஜாம் மருத்துவமனையில் உள்ள தடயவியல் பிரிவுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், லேசான காயம் அடைந்த தாய் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here