தெலுக் பஹாங்கில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு

ஜார்ஜ் டவுன், தெலுக் பஹாங்கிலிருந்து ஒரு ஆணின் சடலம் மிதந்தது. இன்று (மே 28) மதியம் 12.52 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பொலிஸாரிடம் இருந்து தகவல் பெற்றபோது, கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நீரின் மேற்பரப்பில் ஆணின் சடலம் மிதப்பதைக் கண்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அந்த இடத்தில் இருந்த சுற்றுலாப் படகு மூலம் சடலம் கரைக்குக் கொண்டுவரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். முழுமையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன், தீயணைப்பு வீரர்கள் உடலைத் தூக்கினர். பின்னர் அது  மேல் நடவடிக்கைக்காக உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மதியம் 1.45 மணிக்கு  பணி நிறைவடைந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here