தாவாவ் கடலோரத்தில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

தாவாவ், ஜூன் 9 :

நேற்று, இங்குள்ள தஞ்சோங் பத்து லாக்பாண்ட் கடலோரத்தில் இருந்த பாறைகளுக்கு இடையே, ஒர் பையில் தொப்புள் கொடியுடன் கூடிய பெண் குழந்தையின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது.

தாவாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறுகையில், மாலை 4.43 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

“ அக்கடற்கரையோரமாக நடந்து வந்த ஒரு தம்பதியினரின் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு பையில், குழந்தையின் சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர் என்று அவர் கூறினார்.”என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜாஸ்மின் கூற்றுப்படி, இறந்த குழந்தை சுமார் 1,004 கிராம் எடையும் 36 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட ஒரு பெண் குழந்தை என்று மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.

மேலும், போலீசாரின் விசாரணையில், பாத்தேக் துணியால் சுற்றப்பட்ட பாறைத் துண்டானது, குழந்தையுடன் இருந்த பையை மறைக்கும்படி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் “விசாரணை நடந்து வருகிறது, இறந்த உடலை ரகசியமாக அப்புறப்படுத்துவதன் மூலம் பிறப்பை மறைத்ததற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 318 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

விசாரணை நடந்துவருவதால், இந்த வழக்கை ஊகிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தாவாவ் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) 089-752222 என்ற எண்ணில் அல்லது ஏதேனும் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here