சேனாய், ஜூன் 11 :
பெர்சாத்து கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவராக முன்னாள் மந்திரி பெசார் டத்தோ டாக்டர் சஹ்ருடின் ஜமால் நியமிக்கப்பட்டுளார் என்று கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ யாசின் தெரிவித்துள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், டாக்டர் சஹ்ருடின் தனது நியமனக் கடிதத்தை ஜூன் 8ஆம் தேதி பெற்றதாக முஹிடின் கூறினார்.
செப்டம்பர் 9, 2020 முதல் ஜோகூர் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த வந்த முஹிடினுக்குப் பதிலாக புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சஹ்ருடின், 47, நியமிக்கப்பட்டுள்ளார்.
“அவர் இப்பதவியை பொறுப்பேற்றது மிகவும் நல்ல விடயம். நான் அவருக்கு ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பகிர்வதில் உதவுவேன், மேலும் கட்சியை வழிநடத்த இளைய தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லது ”என்று, அவர் இன்று தாமான் சைன்டெக்ஸ் உத்தாமாவில் நடந்த ஜோகூர் பெர்சாத்து கட்சிக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கு முன், டாக்டர் சஹ்ருடின் ஜோகூர் பெர்சாத்து செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.