அனைத்துலக பயணிகளுக்கு கோவிட் -19 பரிசோதனை கட்டாயமில்லை : அமெரிக்கா அறிவிப்பு

கோவிட்-19 பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கோவிட்-19 பரிசோதனை உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வரும் அனைத்துலக பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனைகள் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பயணிகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கோவிட்-19 பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பயணத்துக்கு முன்பு காண்பிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் கெவின் முனோஸ் தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்த்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here