கோலாலம்பூர், ஜூன் 21 :
காராக் நெடுஞ்சாலையில் தனது தோயோத்தா அல்பார்ட் காரை ஓட்டிச் செல்லும்போது, கார் ஜன்னலுக்கு வெளியே எச்சில் துப்பியது தொடர்பாக ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவிய காணொளியின் அடிப்படையில் , அந்த கார் ஓட்டுநருக்கு அதிகபட்சமாக RM400 அபராதம் விதித்தது, அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என செலாயாங் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட உணவக ஆபரேட்டரான லிம் கோ சிங், 44, என்பவர், இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று, பிற்பகல் 3.47 மணிக்கு பெந்தோங்கை நோக்கிச் சென்றபோது, இக் குற்றத்தைச் செய்ததாக நீதிபதி நூர் ஹபிசா ரஜூனிர் முன்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 268 இன் கீழ் பொதுமக்களுக்கு தொல்லை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது, பிரிவு 290 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும், அதிகபட்சமாக RM400 அபராதம் விதிக்கப்படும்.
எனவே லிம்மிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அவர் செலுத்தினார்.
மேலும், அவருக்கு எதிராக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42 (1) இன் கீழ் ஒரே இடத்தில், தேதி மற்றும் நேரத்தில் கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டிய மற்றுமொரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், லிம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் RM5,000 க்குக் குறையாத அபராதம் மற்றும் RM15,000 க்கு மிகாமல் தண்டனையை எதிர்கொள்வார், மேலும் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாது ஓட்டுநர் உரிமத்தையும் இழக்க நேரிடும்.








