புத்ராஜெயா: பாட்டில்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயின் உச்சவரம்பு விலை ஜூலை 1ஆம் தேதி நீக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகிறார். உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட மானியத் திட்டம் தற்காலிக மூன்று மாத நடவடிக்கையாக கருதப்பட்டது.ஆனால் இப்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட தூய பாமாயில் சமையல் எண்ணெய்க்கான அதிகபட்ச சில்லறை விலை ஜூலை 1 முதல் தொடராது. இருப்பினும், 1 கிலோ பாலிபேக் பாக்கெட்டுகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய்க்கு, 2.50 ரிங்கிட் உச்சவரம்பு விலையில், மானியம் இருக்கும் என்று அவர் செவ்வாயன்று தனது அமைச்சகத்தில் தொழில்துறையினர் மற்றும் நுகர்வோர் குழுக்களுடனான சந்திப்பிற்கு பிறகு (ஜூன் 21) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மானியத் திட்டத்திற்காக அரசாங்கம் மாதம் 20 மில்லியன் ரிங்கிட் வரை செலவிட்டதாக நந்தா கூறினார். பாமாயில் சமையல் எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை 5 கிலோ பாட்டிலுக்கு RM29.70 ஆகவும், 1 கிலோவுக்கு RM6.70 ஆகவும், 2kgக்கு RM12.70 ஆகவும், 3kgக்கு RM18.70 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சந்தை விலைகள தொடங்கியதும் நியாயமற்ற உயர்வுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த அமைச்சகம் தீவிரமாக சோதனைகளை நடத்தும் என்று நந்தா கூறினார்.