‘விலையுயர்ந்த காலணிகள்’ ஜோகூர் சுல்தானின் பரிசு என்கிறார் ஜோகூர் மந்திரி பெசார்

ஜோகூர் பாரு, ஜூலை 12 :

பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் விலையில் ஒரு ஜோடி காலணிகளை வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி மறுத்துள்ளார்.

இந்த காலணிகள் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் பரிசு என்று அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் விளக்கினார்.

“இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இது ஜோகூர் சுல்தான் வழங்கிய பரிசு. இவ்வாறு பரிசு வழங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல, மக்களுக்காக கடினமாக உழைக்க அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு சுல்தான் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கியுள்ளார் என்றார்.

முன்னதாக, இன்று பல சீன நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஓன் இவ்வளவு விலையுயர்ந்த காலணிகளை கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here