நூராமிராவின் காதலன் சமூக ஊடகங்களில் அவமதிக்கும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதாக குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா: நகைச்சுவை நிகழ்ச்சியின் போது சர்ச்சையை ஏற்படுத்திய சித்தி நுராமிரா அப்துல்லாவின் காதலன், சமூக ஊடகங்களில் அவமதிக்கும் உள்ளடக்கத்தை பதிவேற்றியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

பகுதி நேர எழுத்தாளரான அலெக்சாண்டர் நவீன் விஜயச்சந்திரன்,38, எனினும், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்ருல் தாருஸ் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் இது அதிகபட்சமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை, RM50,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here