வீட்டின் மீது மோதிய டிரெய்லர்- ஓட்டுநர் போதைப்பொருள் பாவித்திருப்பது உறுதி செய்யப்பட்டது

சிரம்பான், ஜூலை 17 :

இங்குள்ள ஜாலான் பெரிங்காட் 4, கம்போங் ஃபெல்டா செண்டையான் என்ற இடத்தில், நேற்றிரவு இரும்பு ஏற்றிச் சென்ற 30 டன் எடையுள்ள டிரெய்லர் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக, சாலையில் சறுக்கி அருகிலுள்ள வீட்டின் மீது மோதியது.

சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோஃப் கூறுகையில், மலை ஏறும் இடத்தில் இரவு 9.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 32 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற டிரெய்லரின் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

“இதனால் அந்த டிரெய்லர் பின்னோக்கி சரிந்து, டிரெய்லரின் பின்புறம் சாலையின் அருகில் இடதுபுறமாக நகர்ந்து ஒரு வீட்டின் மீது மோதியது” என்றார்.

முதற்கட்ட விசாரணையில், மறுசுழற்சி செய்யப்பட்ட இரும்பை ஏற்றிச் சென்ற 30 டன் எடையுள்ள வால்வோ டிரெய்லர், மலாக்காவிலிருந்து சிலாங்கூர், செப்பாங், சுங்கை பெலேக் நோக்கிச் சென்றபோது விபத்து ஏற்பட்டது, என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த விபத்து காரணமாக யாரும் காயமடையவில்லை என்று நந்தா கூறினார்.

சம்பந்தப்பட்ட டிரெய்லரின் ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில், அவர் மெத்தாம்பேட்டமைனுக்கு நேர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், டிரெய்லர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக சிரம்பான் IPD போதைப்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார், ”என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 43 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here