மலேசியாவின் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவைத் தொழில்களில் 15 மூல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணி அமர்த்த மனிதவளம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது மற்றும் இந்தோனேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தொழிலாளர் ஆட்சேர்ப்பு முடக்கம் குறித்து இரு அமைச்சகங்களுக்கு இடையே நடந்த சந்திப்பை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
கிடங்குத் துறை மற்றும் bird’s nest தொழிலுக்கு குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் கூறினார்.
கட்டுமானத் துறைக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நுழைவை முழுமையாக நிர்வகிப்பதற்கான ஏஜென்சிக்கான கட்டுமானத் தொழிலாளர் பரிவர்த்தனை பெர்ஹாட்டின் (CLAB) முன்மொழிவுக்கும் அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.