சண்டையில் வெளிநாட்டவர் கொலை; 52 வயது நபர் தடுப்பு வைப்பு

கோலாலம்பூர், ஜாலான் துன் எச்எஸ் லீயில் நேற்று நடந்த சண்டையைத் தொடர்ந்து வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

Dang Wangi மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP நூர் டெல்ஹான் யஹாயா, மதியம் 2.26 மணியளவில் மூன்று பேர் சம்பந்தப்பட்ட சண்டை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக  கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 30 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று வெளிநாட்டவர்களும் தரையில் மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர்.

அவர்களில் ஒருவர் இறந்தார். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, விசாரணைகளுக்கு உதவுவதற்காக 52 வயதுடைய ஒருவரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here