சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் உடல்நலக் குறைவோடு இருப்பதாக தகவல்

முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம்  மிகவும் உடல்நிலை குறைவோடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அவரது முன்னாள் அரசியல் செயலாளர் ஃபேக்கா ஹுசின் ஃபேஸ்புக் பதிவில் உறுதி செய்துள்ளார்.

டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை உங்கள் பிரார்த்தனையில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரை மருத்துவமனையில் நேற்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here