தாஜுதீனின் பாலியல் கருத்து தொடர்பான முடிவு நாளை தெரியும்

டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் (தேசிய முன்னணி -பாசீர் சலாக்) கடந்த வாரம்  பாலியல் கருத்து தெரிவித்தாரா என்பதை மக்களவை நாளை முடிவு செய்யும்.

துணை சபாநாயகர் டத்தோ ரஷீத் ஹஸ்னானை மேற்கோள் காட்டி, மலாய் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தாஜுதீனுக்கு எதிராக சபை நடவடிக்கை எடுக்கக் கோரிய கஸ்தூரி பட்டு (பக்காத்தான் ஹராப்பான்-பத்து கவான்) சமர்ப்பித்த கடிதம் தமக்கு கிடைத்ததாக என்எஸ்ட் தெரிவித்துள்ளது.

தாஜுதீன் பாலியல் வன்கொடுமை வார்த்தைகளைப் பயன்படுத்தியதைக் கேட்டதாகக் கூறிய பல சாட்சிகளைச் சந்திக்கத் தான் திட்டமிட்டிருந்ததாகவும் ரஷீட் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் தாஜுடின் சில பெண் டிஏபி உறுப்பினர்களை தகாத வார்த்தையுடனும், புண்படுத்தும் விதமாகவும் முத்திரை குத்தியதையடுத்து, மக்களவை குழப்பமடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here