சிரம்பான், ஜூலை 28 :
ஒரு பெண்ணின் மர்மமான நோய்க்கு சிகிச்சை அளிக்க போமோ (பாரம்பரிய மருத்துவம்) ஒழுங்கமைத்து தருவதாக நம்ப வைத்து, நான்கு முறை மோசடி செய்ததாக ஒரு புல் வெட்டும் தொழிலாளி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 24 வயதான முகமட் ஐசாட் அஹ்மட் என்பவர் நிதி அதிகாரியான பெண்ணை ஏமாற்றியதாக இரண்டு குற்றச்சாட்டுகளை மாஜிஸ்திரேட் முகமட் ஃபிர்தௌஸ் சாலே முன், தனக்கெதிராக குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
முதல் குற்றச்சாட்டாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் நகைகள் மற்றும் ரொக்கம் சேர்த்து மொத்தமாக RM15,362 மோசடி செய்ததாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இரண்டாவது குற்றச்சாட்டில், அதே நோக்கத்திற்காக மோட்டார் உதிரி பாகங்களைக் கையாளும் நிறுவனத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் RM34,020 ஐ மாற்றுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அவர் கூறினார்.மேலும் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி RM14,530 மற்றும் RM32,000 ஆகியவற்றை ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தனித்தனியான பரிவர்த்தனைகளில் செலுத்தினார்.
மார்ச் 19 அன்று மாலை 6 மணியளவில் இங்குள்ள செனவாங்கில் உள்ள ஒரு உணவகத்தில் அனைத்து குற்றங்களும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்குற்றச்சாட்டுக்காக, முகமட் ஐசாட் அஹ்மட் மாஜிஸ்திரேட் நோர்சலிசா டெஸ்மின் முன் ஆஜர்படுத்தப்பட்டார், முகமது ஐசாட் மீது குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் ஆகியவற்றை வழங்குகிறது.