கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், கிரேன் ஓட்டுநர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

அலோர் ஸ்டார், ஜூலை 30 :

புக்கிட் பினாங்கில் உள்ள ஜாலான் பாடாங் தெம்பாக்கில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில், இன்று திடீரென ஏற்பட்ட நிலச்சரி நிலச்சரிவில் கிரேன் ஓட்டுநர் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுவதாக தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை பிரிவின், கெடா மாநில துணை இயக்குநர், முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் தெரிவித்தார்.

இன்று காலை 9.37 மணிக்கு, சம்பவம் தொடர்பாக கெடா ஜேபிபிஎம் செயல்பாட்டு மையத்திற்கு அழைப்பு வந்தது என்றார், அதனைத் தொடர்ந்து போக்கோக் சேனா மற்றும் அலோர் ஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து உறுப்பினர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்தனர்.

“முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், 40 வயதுடைய நபர், அப்பகுதியில் உள்ள இடிபாடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

முகமதுல் எஹ்சான் தொடர்ந்து கூறுகையில், இதுவரை அகழ்வாராய்ச்சி கருவியின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here