ஜெலி, ஜூலை 30 :
இங்குள்ள லாதா ரென்யூட்டில் ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றபோது, அவர்களில் ஒருவர் இன்று நீரில் மூழ்கி மரணமடைந்தால், அவர்களது மகிழ்ச்சி சோகத்தில் முடிந்தது.
ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள கம்போங் பாரு லுபோக் ஸ்டோலைச் சேர்ந்த இசாம் முகமட் சௌபி (24) என்பவரே, தனது மூன்று உறவினர்களுடன் குளித்துவிட்டு கரைக்கு வர முயன்றபோது, தவறி நீரில் விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மூவரும் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் வலுவான மற்றும் ஆழமான நீரோட்டம் காரணமாக அவர்களது முயற்சி வெற்றிபெறவில்லை என்று ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், முகமட் அட்னி இப்ராஹிம் தெரிவித்தார்.
சுற்றுலாத் தளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலியானதாக, தமக்கு நண்பகல் 12.10 மணிக்கு அழைப்பு வந்ததாக அவர் தெரிவித்தார்.
“அவசர அழைப்பைப் பெற்றவுடன், ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் ஒன்பது உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர், அவர்கள் வந்தபோது பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே பொதுமக்களால் நீருக்கு வெளியே மீட்கப்பட்டிருந்தார், ஆனால் அவர் இறந்துவிட்டார் என்பதை சுகாதார பணியாளர்கள் உறுதிப்படுத்தினார்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் ஜெலி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.