மலேசியாவுக்குள் நுழைய இனி MySejahtera செயலியை நிரப்ப வேண்டிய அவசியமில்லை

நாட்டிற்குள் நுழைவதற்கு முன் பயணிகள் இனி MySejahtera செயலியில் பயணிகளுக்கான அட்டையை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறுகிறார். தற்போது நாட்டின் சுகாதாரத்துறையின் சிறந்த நிலையை கருத்தில் கொண்டு திங்கள்கிழமை முதல் இந்த தேவை நீக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், சுகாதார அதிகாரிகள் அனைத்து நுழைவு புள்ளிகளிலும் பயணிகளின் கண்காணிப்பை அதிகரிப்பார்கள். அவர்களுக்கு தொற்று நோய்களின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்யப்படும் என்று கைரி கூறினார்.

நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள் மேலதிக பரிசோதனைகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றார். மதிப்பீட்டிற்குப் பிறகு, அவர்களுக்கு கோவிட்-19, குரங்கம்மை, MERS-CoV அல்லது வேறு ஏதேனும் நோயின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மேலும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here