கூலாய், ஜூலை 30 :
இங்குள்ள தாமான் லகெண்டா புத்ரா தொழிற்பேட்டையில் நடந்த அதிரடி சோதனையில் RM100,000க்கும் அதிகமான மதிப்புள்ள 72,800 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 29) பிற்பகல் 3 மணியளவில் நடந்த சோதனையின் போது, இப் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் எட்டு நபர்களும் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் தோக் பெங் இயோவ் தெரிவித்தார்.
“மானிய விலையில் வழங்கப்பட்ட டீசலை சட்டவிரோத விற்பனை செய்ததாக நம்பப்படும் ஏழு ஆண்களையும் ஒரு பெண்ணையும் நாங்கள் கைது செய்துள்ளோம். சந்தேகநபர்கள் அனைவரும் 28 முதல் 52 வயதுடையவர்கள் என்றும் உள்ளூர்வாசிகள் என்றும் அவர் கூறினார்.
“இந்தச் சோதனையின்போது RM174,720 மதிப்புள்ள மானிய விலை டீசலுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்,” என்று அவர் இன்று சனிக்கிழமை (ஜூலை 30) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் எவருக்கும் முன்னைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்று தோக் மேலும் கூறினார்.
கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
“இந்த வழக்கு வழங்கல் கட்டுப்பாடு சட்டம் 1961 இன் பிரிவு 21 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, மேலும் குற்றவாளிகளுக்கு அதே சட்டத்தின் பிரிவு 22(1) இன் கீழ் தண்டனை விதிக்கப்படலாம், இது அதிகபட்சமாக RM100,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். ,” அவர் கூறினார்.