கிள்ளான் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டவருக்கு தீக்காயம்

கிள்ளான்: பண்டார் புக்கிட் கிள்ளானில் உள்ள கடையில் தீப்பிடித்ததில் வெளிநாட்டவர் ஒருவர் உடலில் தீக்காயம் அடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தின் கிட்டத்தட்ட 50% அழிந்துவிட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு காலை 11.41 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார். ஒரு நபர், 45 வயதான வங்காளதேச ஆடவருக்கு  தோள்பட்டையில் தீக்காயம் ஏற்பட்டது.

தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நோரஸாம் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here